.

பொங்கலுக்கு வெட்டிய கரும்புகள் காய்ந்து போன அவலம்! விவசாயிகள் கவலை

 கலசபாக்கம் அடுத்த சி. நம்மியந்தல் கிராம பகுதி விவசாயிகளில் பலர் கரும்பு பயிரிட்டு திருப்பத்தூர் அரசு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்திருந்தனர்.

 இந்த நிலையில் நன்கு விளைச்சலடைந்த கரும்புகளை சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் அனுமதியின் பேரில் அறுவடை செய்யப்பட்டது. ஆனால் 4 நாட்களாகியும் லாரி வராததால் அறுவடை செய்த கரும்புகள் வயலிலேயே காய்ந்து வருகின்றன.

பொங்கலுக்கு வெட்டிய கரும்புகள் காய்ந்து போன அவலம்! விவசாயிகள் கவலை

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கர் கரும்பு நடவு செய்வதற்கு ரூ. 25 ஆயிரம் செலவாகிறது. இதன்பின்னர் 12 மாதங்கள் கண் விழித்து காப்பாற்றி வெட்டும் போது ஒரு டன் கூலியாக ரூ.900-ம், தோட்டத்தில் இருந்து லாரியில் ஏற்றுவதற்கு கூலியாக ரூ. 400-ம் செலவாகிறது. இவ்வளவு செலவு செய்தும் ஏக்கருக்கு 60 டன் வர வேண்டிய நிலையில் 30 டன் மட்டுமே கரும்பு மகசூல் கிடைக்கிறது.

அதிலாவது ஏதாவது கிடைக்கும் என நாங்கள் பயிரிட்ட கரும்பை ஆலைக்கு அனுப்பி வைக்கலாம் என்று இருந்தால் அறுவடை செய்தபின் ஆலை நிர்வாகம் லாரியை அனுப்பவில்லை. ஆலையில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் சரி செய்த பின்னரே கரும்புகளை எடுத்து செல்ல முடியும் என கூறுகின்றனர்.

இதனால் அறுவடை செய்த கரும்புகள் அனைத்தும் தக்கைபோல் காய்கிறது. இதனை ஏற்றி அனுப்பினால் வெட்டிய கூலி கூட நிற்காது. மேலும் ஆலை ரிப்பேர் என்றால் கரும்பு வெட்டுவதை களப்பணியாளர் நிறுத்த சொல்ல வேண்டும். எனவே ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு எடைகுறைவால் ஏற்பட்ட இழப்புக்கு நிவாரணம் தர வேண்டும்.

Previous Post Next Post

نموذج الاتصال