.

மின்மூலங்கள் என்றால் என்ன ? மின் மூலத்தின் வகைகள்-GMD MATHS

மின்‌மூலங்கள்‌ என்றால் என்ன ?

மின்சாரத்தை உருவாக்கும்‌ மூலங்கள்‌ மின்‌மூலங்கள்‌ எனப்படும்‌. பலவகையான மின்‌ மூலங்களிலிருந்து மின்சாரம்‌ பெறப்படுகிறது. 

மின்மூலங்கள் வரைபடம்

தமிழகத்தின்‌ முக்கிய மின்நிலையங்கள்‌: 

அனல்மின்‌ நிலையங்கள்‌ (கடலூர்‌ மாவட்டத்தில்‌ நெய்வேலி, திருவள்ளூர்‌ மாவட்டத்தில்‌ எண்ணுர்‌), நீர்மின்‌ நிலையங்கள்‌ (சேலம்‌ மாவட்டத்தில்‌ மேட்டூர்‌, திருஹெல்வேலி மாவட்டத்தில்‌ பாபநாசம்‌), ௮ணுமின்நிலையங்கள்‌ (காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ கல்பாக்கம்‌, திருநெல்வேலி மாவட்டத்தில்‌ கூடங்குளம்‌), காற்றாலைகள்‌ (கன்னியாகுமரி மாவட்டத்தில்‌ ஆரல்வாய்ஸாழி மற்றும்‌ திருநெல்வேலி மாவட்டத்தில்‌ கயத்தாறு) இவற்றைத்‌ தவிரப்‌ பல்வேறு இடங்களில்  காணப்படுகிறது.

1. அனல்மின்‌ நிலையங்கள்‌ 


அனல்மின்‌ நிலையங்களில்‌ நிலக்கரி, மீசல்‌ அல்லது வாயுக்களை எறிப்பதன்‌ மூலம்‌ கிடைக்கும்‌ எவப்ப ஆற்றலால்‌ நீராவி உருவாக்கப்படுகிறது. 

இந்த நீராவியால்‌ டர்பைன்‌ இயங்குகிறது. டர்பைன்‌ இயங்கும்‌ பொழுது இரு மின்காந்தங்களுக்கு இடையில்‌ வைக்கப்பட்டுள்ள கம்பிச்சுருள்‌ சுழல்வதால்‌ உருவாகும்‌ மின்காந்தத்‌ தூண்டலால்‌ மின்சாரம்‌ உருவாக்கப்படுகிறது. இங்கு வவப்ப ஆற்றலானது மின்னாற்றலாக மாற்றப்படுகிறது. 

காற்றாலை நிலையங்கள்

2. நீர்மின்‌ நிலையங்கள்‌ 

நீர்மின்‌ நிலையங்களில்‌ அணைக்‌கட்டிலிருந்து பாயும்‌ நீரால்‌ டர்பைன்‌ சுழற்றப்பட்டு மின்சாரம்‌ உருவாக்கப்படுகிறது. இங்கு இயக்க ஆற்றல்‌ மிண்னாற்றலாக மாற்றப்படுகிறது. நீர்மின்‌ நிலையங்கள்‌ அதிக காலம்‌ இயங்கக்கூடியவை மற்றும்‌ சிக்கனமானவை.

நீர் மின் நிலையங்கள்

3.அணு மின் நிலையங்கள் : 

அணுமின்‌ நிலையங்களில்‌ அணுக்கரு ஆற்றலைக்‌சகொண்டு நீரானது சாதிக்க வைக்கப்படுகிறது. இதனால்‌ உருவாகும்‌ நீராவியைக்‌ கொண்டு டர்பைன்‌ இயக்கப்படுகிறது. டர்பைனின்‌ இயக்கத்தால்‌ மின்சாரம்‌ உருவாக்கப்படுகிறது. இங்கு அணுக்கரு ஆற்றலானது இயக்க ஆற்றலாகவும்‌ பின்‌ மிண்னாற்றலாகவும்‌ மாற்றப்படுகிறது.

அணு மின் நிலையங்கள்-கூடங்குளம்

4.காற்றாலை நிலையங்கள் : 

காற்றாலைகளில்‌, காற்றின்‌ ஆற்றலால்‌ டர்பைன்‌ சுழற்றப்படுகிறது. இதன்மூலம்‌ மின்சாரம்‌ உருவாகிறது. இங்கு இயக்க ஆற்றல்‌ மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

காற்றாலைகள்-ஆரல்வாய்மொழி


Previous Post Next Post

نموذج الاتصال