வடிகட்டுதல் :
செல்வியின் தாயார் தேநீரில் இருந்து பிரிப்பதற்கென தேயிலைத்தூளைப் வடிகட்டியைப் பயன்படுத்தினார்.
பெரிய அளவிலான தேயிலைத்தூள்கள் வடிகட்டியில் தக்கவைக்கப்பட்டு தெளிந்த தேநீர் கரைசல் மிகச் சிறிய துளை வழியே வெளியேற்றப்படுகிறது. இதற்கு வடிகட்டுதல் என்று பெயர்.
சலித்தல் :
ஒரு சல்லடை என்பது வடிகட்டியைப் போன்றதாகும். வெவ்வேறு அளவுடைய திடப் பொருள்களைப் பிரித்தெடுக்கும் முறைக்கு சலித்தல் என்று பெயர்.
எ.கா: மாவில் இருந்து தவிடை நீக்குதல், மணலில் இருந்து சரளைக் கற்களை நீக்குதல்.
கட்டுமானப் பணிகளில், மணலிலிருந்து சரளைக் கற்களை நீக்குவதற்கு கம்பியால் ஆன சல்லடை பயன்படுத்தப்படுகிறது.
கடைதல் :
மிகச் சிறிய அளவிலான கரையாத திடப்பொருள்களை திரவத்திலிருந்து தயிரிலிருந்து வெண்ணெய் எடுத்தல்.
எ.கா:
பிரித்தெடுப்பதற்கு கடைதல் முறையினைக் கையாளலாம்.
வேகமாகக் கடையப்படும்போது திண்ம வெண்ணெயானது பாத்திரத்தின் பக்கங்களில் சேர்கிறது.கடைந்தபின் கிடைக்கும் வெண்ணெய் மற்றும் மோர் ஆகிய இரு பொருள்களுமே உண்பதற்கு உகந்தவையாகும்.
கதிர் அடித்தல் :
நாம் செடிகளிலிருந்து பூக்களை பறிக்கும் போது தண்டுகளில் இருந்து அவற்றை பிரிக்கிறோம். தாவரத் தண்டுகளில் இருந்து பெறப்படும் நெல் மற்றும் கோதுமை போன்ற தானியங்களையும் பிரிக்கின்றோமா? அது இயலாது.
ஏனெனில், தானியங்கள் சிறிய அதேபோல் அளவிலானவை; மேலும், அவற்றின் எண்ணிக்கை அதிகம். தானியங்களை அவற்றின் தாவரத் தண்டுகளில் இருந்து பிரிப்பதற்காக விவசாயிகள் தண்டுகளை கடினமான பரப்பில் அடிக்கின்றனர்.இம்முறைக்கு கதிரடித்தல் என்று பெயர்.
தூற்றுதல்
அரிசி, கோதுமை மற்றும் பிற உணவு தானியங்கள் உமியால் மூடப்பட்டிருக்கும். உமியை நம்மால் உண்ண முடியாது. உமி மிகவும் மென்மையாக இருப்பதால் காற்றினால் எளிதாக அடித்துச் செல்லப்படும். தானியங்களிலிருந்து உமியை அகற்றுவதற்குப் பயன்படும் முறைக்கு தூற்றுதல் என்று பெயர்.
கலவையினை குறிப்பிட்ட உயரத்தில் இருந்து காற்றடிக்கும் திசையில் விழச் செய்யவேண்டும். உமி போன்ற லேசான திடப்பொருள்கள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு தனியே சேர்ந்திருக்கும். திடப்பொருள்கள் எடை ஒரு குவியலாகச் அதிகமுள்ள அதாவது தானியங்கள் தூற்றுபவரின் அருகே சிறு குவியலாகச் சேரும்.
உங்களுக்குத் தெரியுமா?
உமி என்பது விதை அல்லது தானியத்தை சுற்றி காணப்படும் கடினமான அல்லது பாதுகாப்பான உறையாகும்.
அரிசியின் வளர்நிலை காலங்களில் இது அரிசியை பாதுகாக்கிறது. கட்டுமான பொருளாகவும் உரமாகவும் மின்காப்பு பொருளாகவும் எரிபொருளாகவும் இது பயன்படுகிறது.
கைகளால் தெரிந்தெடுத்தல்:
அரிசியிலிருந்து கற்களை எவ்வாறு பிரிக்கிறோம் ? கற்கள் தானியங்களில் இருந்து மாறுபட்ட உருவத்தைப் பெற்றிருக்கும் ஆனால் அவற்றை நாம் எளிதாக அடையாளம் கண்டு கைகளால் நீக்குகிறோம்.
இம்முறை கைகளால் தெரிந்தெடுத்தல் என்று பெயர். ஒருவேளை கற்கள் அரிசியை போன்ற ஒரு அமைப்பை பெற்று இருந்தால் அவற்றை நீக்குவது கடினம்.
காந்த பிரிப்பு முறை :
இரும்புத் துகள்கள் கலந்திருக்கும் ஒரு கலவையில் இரும்பானது காந்தத்தால் கவரப்படும் என்ற பண்பினைப் பயன்படுத்தி காந்தத் தன்மையுடைய பொருள்களை காந்தத்தன்மையற்ற பொருள்களில் இருந்து பிரிக்கலாம்.
காந்தத்தால்கவரப்படும் பொருள்கள் காந்தத்தன்மையுடைய பொருள்கள் எனப்படும். காந்தத்தினைப் பயன்படுத்தி திண்மங்களைப் பிரிக்கும் முறைக்கு காந்தப்பிரிப்பு முறை என்று பெயர்.
படிய வைத்தல் (அ) வண்டல் படிவாக்கல்
அரிசி மற்றும் பருப்பு வகைகளில் சிறிய வைக்கோல் துகள்கள், உமி, தூசு போன்றவை கலந்திருக்கும். சமைக்கும் முன் அவற்றை நீக்குதல் வேண்டும்.
உங்கள் வீட்டில் அவற்றை நீக்குவதற்குப் பின்பற்றப்படும் முறைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இத்தகைய பொருள்களை நீக்க அரிசியையோ பருப்பையோ நீரில் கழுவ வேண்டும்.
அவ்வாறு கழுவும்போது லேசான மாசுக்கள் நீரில் மிதக்கும்; எடை அதிகமுள்ள அரிசி போன்ற தானியங்கள் நீரில் மூழ்கி அடியில் தங்கும், இம்முறைக்கு படிய வைத்தல் அல்லது வண்டல் படிவாக்கல் என்று பெயர்.
தூய்மையான அரிசி நீருக்கடியில் தங்கியபின், நீரில்உள்ளமாசுக்கள் அனைத்தையும் கவனமாக வெளியேற்ற வேண்டும். இம்முறைக்கு தெளிய வைத்து இறுத்தல் என்று பெயர்.
கலங்கலான நீரிலிருந்து சேறை நீக்குதல்
கலங்கலான நீர் மிக நுண்ணிய களிமண் துகள்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும். ஒரு கண்ணாடிக் குவளையில் உள்ள கலங்கிய நீரினை சிறிது நேரத்திற்கு அசைக்காமல் வைக்கும்போது என்ன நிகழும்? களிமண் துகள்கள் கனமாக இருப்பதால் அவை. குவளையின் அடியில் வண்டலாகத் தங்கும், நீரானது மேல் அடுக்காக தெளிந்த நிலையில் இருக்கும்.
ஒரு கலவையில் கனமான பொருள்கள் இருப்பின் அவற்றைச் சிறிதுநேரம் அசைக்காமல் வைக்கும்பொழுது எடை அதிகமான பொருள்கள் வண்டலாக தங்கி விடும். மேலடுக்கில் தெளிந்த நீர்மம் கிடைக்கும். இம்முறைக்கு படியவைத்தல் என்று பெயர்.
தெளிய வைத்து இறுத்தல்
இச்செயல் படிய வைத்தலைத் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. அடியில் தங்கிய வண்டலைப் பாதிக்காத வண்ணம் மேல் அடுக்கில் உள்ள நீர் மற்றொரு கலனிற்கு மாற்றப்படுகிறது.
வண்டலில் இருந்து நீர்மத்தைப் பிரிக்கும் முறைக்கு தெளிய வைத்து இறுத்தல் என்று பெயர். அடியில் தங்கும் பகுதி வண்டல் என்றும், தெளிந்த நிலையில் உள்ள பகுதி தெளிந்த நீர் என்றும் அழைக்கப்படும்.
தெளிய வைத்து இறுத்த பிறகும் நீரில் நுண்ணிய களிமண் துகள்கள் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. அவற்றை எவ்வாறு நீக்கலாம்? வடிகட்டி மூலம் அவற்றை நாம் நீக்கலாம். ஒரு. வடிகட்டியோ அல்லது துணியோ இத்தகைய நுண்ணிய களிமண் துகள்களை நீக்குவதற்கு உதவும் என்று கருதுகிறீர்களா? இச்செயலைச் செய்துபார்த்து, கண்டுபிடியுங்கள்.
வடிகட்டுதல்
நுண்ணிய மாசுக்களை நீக்குவதற்காக நாம் வடிதாளைப் பயன்படுத்துகிறோம். ஒரு வடிதாளில் களிமண் துகள்களைக் காட்டிலும் அளவில் சிறிய நுண்துளைகள் உள்ளன. ஒரு வடிதாளினை எவ்வாறு பயன்படுத்துவது என இப்பொழுது பார்க்கலாம்.
ஒரு வடிதாளை எடுத்துக் கொண்டு அதனைக் கூம்பு வடிவில் மடிக்கவும் (படத்தைப் பார்க்கவும்). கலங்கிய நீரினை வடிதாளில் மெதுவாக, கவனமுடன் ஊற்றவும்.
வடிகட்டுதலின் போது தெளிந்த நீர் புனல் வழியே கீழேயுள்ள கலனை அடையும். எஞ்சியுள்ள களிமண் துகள்கள்( வீழ்படிவு) வடித்தாளிலேயே தங்கிவிடும்.
ஒரு கலவையில் உள்ள களிமண் மணல் போன்ற கரையாத பொருள்களை வடித்தாளை பயன்படுத்தி பிரித்தெடுக்கும் முறைக்கு வடிகட்டுதல் என்று பெயர்.
வடிகட்டியை கடந்து கீழே இறங்கி வரும் திரவத்திற்கு வடிநீர் என்றும், வடிதாளில் தங்கம் கரையாத பகுதிக்கு வண்டல் என்றும் பெயர்.