.

நடிகர் யோகி பாபு ஒரு பேய்மாமா

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் யோகிபாபு. இவர் 2020 க்கு முன்பு எங்கு இருந்தார் என்பது தெரியவில்லை. இந்த 2021 ஆம் ஆண்டில் தான் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி எல்லோர் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.

இதற்கு முன்பெல்லாம் ஒரு சில படங்களில் வில்லன்களுக்கு எடுபிடி வேலை செய்யும் அடியாளாக நடித்திருந்தார். அதன் பிறகு பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து மிகப் பெரிய அளவில் பிரபலமாகி இருக்கிறார்.

தர்மபிரபு, ஜாம்பி, மண்டேலா, கூர்கா மற்றும் பல திரைப்படங்களில்   நடிகராகவும் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமன்றி எந்த கதாபாத்திரம் கிடைக்கிறதோ அந்த கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.

இதை படிக்க: தன் கணவருக்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பிவட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி!

தற்போது" பேய் மாமா" என்கிற திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு நடித்து வெளியிட்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் யோகி பாபு ,மொட்டை ராஜேந்திரன், கோவை சரளா, சிங்கம் புலி மற்றும் பல சினிமா நட்சத்திரங்கள் இணைந்து ஒரு காமெடி கலந்த திகில் திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்.





  நடிகர் சந்தானம் இதற்கு முன்பெல்லாம் நடிகர்களுக்கு துணை நடிகராகவும் காமெடி நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது அவர் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று கட்டுக்கோப்பாக இருக்கிறார்.

ஆனால் யோகிபாபு நடிகர்களுக்கு துணை நடிகராகவும், காமெடி நடிகராகவும் படத்தில் ஹீரோவாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஒரு சின்ன கேரக்டர் கிடைத்தாலும் அதைக்கூட ஏற்று நடிக்கத் தயாராக இருக்கிறார்.



"Bhoot "என்ற ஆங்கில திரைப்படத்தை கொண்டு தமிழில் நடிகர் யோகி பாபு நடிப்பில் தற்போது  "பேய்மாமா "என்கிற திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.



"பேய்மாமா "என்ற தலைப்பில் ஏற்கனவே நடிகர் வடிவேலுவை கொண்டு திரைப்படம் எடுக்கப்போவதாக பரபரப்பாக பேசி வந்தது. ஆனால் தற்போது இந்த திரைப்படம் நடிகர் யோகிபாபு-க்கு சென்றுள்ளது.


தற்போது " பேய் மாமா" திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. மக்கள் அனைவரும் ஆர்வமாக சென்று திரைப்படத்தை கண்டு ரசித்து வருகிறார்கள்.
Previous Post Next Post

نموذج الاتصال