.

தன் தந்தையின் பெயரை மகனுக்கு வைத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்!!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மகன் பிறந்தான் .

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் சிவகார்த்திகேயன். இவர் முதன்முதலில் தனுஷ் இன் " 3 "படத்தின் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஆர்த்தி என்பவருடன் திருமணமாகி ஆராதனா என்ற மகள் இருக்கிறார்.
அதன்பிறகு பல மாதங்களுக்குப் பிறகு தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மகன் பிறந்திருக்கிறான். 

இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்த நடிகர் சிவகார்த்திகேயன் சமூகவலைதளங்களில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.


நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தையின் புகைப்படம்


 " 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி🙏 அம்மாவும் குழந்தையும் நலம். "

என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதை கண்ட அவரது ரசிகர்கள் அழகான அவரது மகனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 தற்போது தன் அன்பு மகனுக்கு தன் தந்தையின் பெயரையே மகனுக்கும் வைத்து இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இதைப்பற்றி  ட்விட்டரில் அவர் கூறியதாவது,
 "  எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும்
“குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம்🙏😊

Heartfelt thanks to each & everyone for showering ur wishes on our little boy..With all ur blessings & love we hv named our son “GUGAN DOSS" 🙏😊  "
என்று தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட அவரது ரசிகர்கள் குழந்தைக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். பல்வேறு நடிகர் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Previous Post Next Post

نموذج الاتصال