பால் என்பது, வெண்மையான ஒரு திரவம். இது விலங்குகளில் பாலூட்டிகளின்
பால் சுரப்பியிலிருந்து உற்பத்தியாகிறது.
பிறந்த குட்டி அல்லது குழந்தைகளின் முக்கியமான ஆதார ஊட்டச்சத்து மிக்க உணவாகப் பால் கருதப்பருகிறது. இதனைத்தான் நாம் அன்றாட வாழ்வில் பயன்பருத்துகிறோம்.
நாம் பயன்படுத்தப்பரும் பாலானது பசு, எருமை மாருகள் மற்றும் ஆருகளிலிருந்து
கிடைக்கும் முக்கியமான பொருளாகும்.
நம் அன்றாட உணவில் பாலானது தேநீர், காஃபி, ஐஸ்கிரீம், சாக்லேட், இனிப்பு மற்றும் இவை போன்ற பால் சம்பந்தமான பொருள்களைத் தயாரிக்க உதவுகிறது.
புரதம் மற்றும் கால்சியம் மிக்க ஊட்டச்சத்து உணவாக இருப்பதால் பன்னீர், பாலாடைக்கட்டி, பாலை (க்ரீம்), வெண்ணய், நெய் மற்றும் தயிர் போன்றவற்றைத் தயாரிக்க பால் உதவுகிறது.
| முட்டை |
பல்வேறு வகையான பெண் பறவைகள்அதாவது கோழி, வாத்து, வான்கோழி மற்றும் நெருப்புக்கோழிகள் போன்றவை அவற்றின் இளம் உயிரிகள் உருவாவதற்கு முட்டையிடுகின்றனண.
நான் சாப்பிட கூடிய முட்டையிலிருந்து பல்வேறு வகை தயாரிப்புகள்.இதனைத்தான் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறோம் அவை பின்வருமாறு,
- முட்டை நம் உடலுக்குச் சக்தியையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகின்றது.
- இது புரதம் நிறைந்த ஊட்டச்சத்து உடையதாகும்.
- ஆறு கிராம் எடையுள்ள முட்டை (90) உயர்ந்தரகப் புரதத்தைக் சகாண்டுள்ளது.
- காலையில் புரதம் மிக்க உணவு, அன்றைய தினம் முழுவதும் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
- எந்த வயதினரும், தினமும் முட்டையை உண்பது நல்லது.
| உங்களுக்கு தெரியுமா ? |
|---|
| நல்ல முட்டை எது ?அழுகிய முட்டை எது என்பதை உங்களால் பிரித்தறிய முடியுமா? |
| 1. ஒரு பாத்திரத்தில் நிறைய நீரை எருத்துக்கொள்ள வேண்டும். 2. அதில் முட்டையை வைக்க வேண்டும். 3. முட்டை, நீரில் மூழ்கினால் அது நல்ல முட்டை, முட்டை நீரில் மிதந்தால் அது அழுகிய முட்டையாகும். |
| நோக்கம் : தேன் சுத்தமானதா? இல்லையா? என்பதைக் கண்டுபிடித்தல். |
| தேவையான பொருள்கள் : நீர் மற்றும் தேன் |
| செய்முறை : ஒரு குவளையில் நீரை எருத்துக் கொண்டு அதில் ஒரு துளி தேனை ஊற்றவும். பின் அதைக் கவனித்துப் பாருங்கள். |
| அறிவன : நீரில் இடப்பட்ட ஒரு துளித் தேன் கரையாமல் பாத்திரத்தின் அடிப்பகுதி வரை என்றால் அது சுத்தமான தேன். பாத்திரத்தின் அடிப்பகுதியை அடையும் முன்னரே அது கரைந்தால் அது சுத்தமான தேன் இல்லை. |
| உங்களுக்கு தெரியுமா ? |
| வேலைக்கார தேனீக்களின் வேலை என்னவென்று தெரியுமா ? |
| * மலர்களில் உள்ள தேனைச் சேகரிக்கும்,. * அவை இளந்தேனீக்களை வளர்க்கும். * தேன் கூடு சேதம் அடைந்தால் அதைச் சரி செய்யும், தேன் கூட்டைப் பாதுகாக்கும். |
| உங்களுக்கு தெரியுமா ? |
| தேன் எங்கிருந்து நமக்குக் கிடைக்கிறது? அது எவ்வாறு உருவாகிறது? என்பது தெரியுமா? |
| நீங்கள் தேன் கூட்டில் பல தேனீக்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். தேனீக்கள் மலர்களிலிருந்து, நெக்டார் என்ற இனிப்புச் சாற்றைச் சேகரித்து, அதைத் தேனாக மாற்றி, அதைத் தேன் கூட்டில் உள்ள தேன் அறைகளில் சேமிக்கின்றன. தேன் என்பது தேன் கூட்டிலிருந்து நம்மால் பிரித்தெருக்கப்பரும் இனிப்பான சாறாகும். மலைப்பகுதியில் வசிக்கும் மக்களால், அடர்ந்த காடுகளில் உள்ள தேன் கூடுகளிலிருந்து இயற்கையான மலைத் தேன் எருக்கப்பருகின்றது. தேன் சிறந்த மருத்துவ குணம் மிக்கது, அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும் |
| இறைச்சி |
விலங்குகளின் உடலில் தசை பகுதி இறைச்சி எனப்படும். இதனை தான் நாம் இறைச்சியாக உண்கிறோம்.
பெரும்பாலும் இறைச்சி என்பது எலும்பு தசையையும் அதில் உள்ள கொழுப்பையும் குறிக்கும். மனிதர்களில் சிலர் கோழி, ஆடு, முயல், பன்றி ,வெள்ளாடு ,ஒட்டகம் ,எருமை, மீன், நண்டு, இறால் போன்றவற்றை உணவாக உட்கொள்கிறார்கள்.
- விலங்குகளின் இறைச்சி சிலருக்கு உணவாக பயன்படுகிறது.
- இறைச்சியில் ஊட்டச்சத்து அதிகம் இருப்பதால் அது முக்கிய உணவாக பயன்படுகிறது.
- மேலும் கோழி இறைச்சி பெருமளவில் மனிதர்கள் பலரும் பயன்படுத்துவதால் அவை வணிக ரீதியாக கோழிப்பண்ணை அமைத்து கோழிகள் வளர்க்க உதவுகிறது.


